என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
    X

    தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

    • தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • ரூ.300 வாங்கி கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் நடேசன் (வயது 70). இவரது மனைவி பாப்பாத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு சந்திரன், ரவீந்திரகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நடேசன் 2-வது மகன் ரவீந்திரகுமார் வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை நடேசன் ரவீந்திரகுமாரிடம் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வசித்து வரும் மூத்த மகன் சந்திரன் வீட்டிற்கு செல்வதற்காக ரூ.300 வாங்கி கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். ஆனால் அவர் நேற்று மாலை பாளையம்- குரும்பலூர் பிரிவு சாலைக்கு வடக்கே உள்ள குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான புளியந்தோப்பில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்டவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×