என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முதியவர் மர்மமான முறையில் சாவு
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை
- முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 62). இவருடைய மனைவி ரத்னம். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்வேல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே சாலையோரத்தில் கதிர்வேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கதிர்வேலின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்