search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதியவர் மர்மமான முறையில் சாவு
    X

    முதியவர் மர்மமான முறையில் சாவு

    • வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை
    • முதியவர் மர்மமான முறையில் இறந்தார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 62). இவருடைய மனைவி ரத்னம். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற கதிர்வேல் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே சாலையோரத்தில் கதிர்வேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்டவர்கள் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதிர்வேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கதிர்வேலின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கதிர்வேல் எப்படி இறந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×