மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா

மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடைபெற்றதுபக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்
மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
Published on

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதில் வேண்டுதல் நிறைவேறிய 250 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மஞ்சள் ஆடை உடுத்தி, பய பக்தியுடன் கடந்த ஒரு வாரமாக விரதமிருந்து மருவத்தூர் அம்மன் குளத்தில் சக்தி அழைத்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடங்களை தலையில் சுமந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com