என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை
    X

    செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை

    • மகா மண்டல பூஜை
    • அனைத்து மும்மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வமுத்து மாரியம்மன் கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் மற்றும் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை ஆகிய தெய்வங்களுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 12ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. நேற்று மகா மண்டல பூஜை 48 நாள் சிறப்பு நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் மஹா யாகமும், அனைத்து மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூர்ணகதி முடித்து மகாததீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×