என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒலிபெருக்கி ஆபரேட்டர் தற்கொலை
    X

    ஒலிபெருக்கி ஆபரேட்டர் தற்கொலை

    • அடிக்கடி நெஞ்சு வலியால் அவதிபட்டு வந்தவர்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் தேவேந்திரகுல வேளாளர் தெருவை சேர்ந்தவர் ஜீவா. இவரது மகன் தீனா (வயது 22). இவர் 12-ம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, அதே பகுதியில் ஒலிபெருக்கி (மைக்-செட்) ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தீனா மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்பட்டு வந்ததாம். இதனால் அவரது பெற்றோர் அவரை அவ்வப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் வீட்டில் உள்ள அறையில் தீனா தூங்க சென்றார். நேற்று அதிகாலை தீனாவின் தாய் அவரது அறையை பார்த்தபோது, தீனா சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார். இதைப்பார்த்த அவரது தாய் கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×