என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பு
    X

    வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பு

    • வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    • போலீசாரை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்

    கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வக்கீல்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் அந்தந்த அசோசியேசனை சேர்ந்த வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த கோர்ட்டுகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×