search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்ப்ராய்டரி பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு
    X

    எம்ப்ராய்டரி பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு

    • பெரம்பலூர் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி பெற மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • ௩௦ நாட்கள் பயிற்சிக்கு தொழில் தொடங்க வங்கி கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வரும் 3-ந்தேதி முதல் இலவசமாக அளிக்கப்படவுள்ளது. 18 வயதுக்கு மேலும், 45 வயதுக்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருத்த வேண்டும். பயிற்சியின் கால அளவு 30 நாட்கள். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி பெற விருப்பமுள்ள பெண்கள் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் அலுவலகத்தில் தகுந்த ஆவணங்கள், 3 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் வரும் 2-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். மேலும் 2ம்தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளவேண்டும். மேலும் விபரங்களுக்கு 04328-277896, 9488840328 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    Next Story
    ×