என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
    X

    பெரம்பலூர் கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

    • பெரம்பலூர் கல்லூரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டப்பட்டது
    • . இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தின் சார்பில் நடந்த சர்வதேச யோகா தின விழாவிற்கு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களுடன் யோகா பயிற்சி செய்தார். கல்வி நிறுவன செயலாளர் நீல்ராஜ், இயக்குநர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்றுனர் கிருஷ்ணகுமார் தியானம் , விரிச்சாசனம், திரிக்கோனாசனம், பத்மாசனம், பத்மா பர்வதாசனம், யோகமுத்ரா, வஜ்ராசனம், வீராசனம், மகா முத்ராயோகா போன்ற யோகா கலையை செய்முறை விளக்கமளித்து பயிற்சி அளித்தார். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் உமாதேவி பொங்கியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் இளங்கோவன் நன்றி கூறினார்.

    பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் யோகா மையம், நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ரோவர் கல்வி குழுமத்தின் தாளாளர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை தாளாளர் ஜான் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெயந்தி, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் யோகா கலை குறித்து பேசினர். யோகா மைய ஒருங்கிணைப்பாளர் கீதா, உதவி ஒருங்கிணைப்பாளர் அனிதா ஆகியோர் யோகாவின் சிறப்புக்கள் குறித்து எடுத்துக்கூறி செயல்முறை விளக்கமளித்து பயிற்சி அளித்தனர். இதில் 200க்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்ராஜா அனைவரையும் வரவேற்றார். முடிவில் லெப்டினண்ட் பிரவீன் பெருமாள் நன்றி கூறினார்.

    பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலைக்கல்லூரி கூட்டரங்கில் கல்லூரி மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் விவேகானந்தன், நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மனவளக்கலை மன்ற உதவி பேராசிரியர் பவானி மாணவிகளுக்கு மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா செய்வதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது குறித்து விளக்கி கூறி, யோகா செய்முறை பயிற்சி அளித்தார். இதில் 300க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் சுபலெட்சுமி வரவேற்றார். முடிவில் யோகா ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.

    Next Story
    ×