என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர்-வேப்பந்தட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவமுகாம்கள் - கலெக்டர் தகவல்
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
- 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
பெரம்பலூர் வட்டத்தில் வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 19-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21.07.2022 காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரையிலும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-தேதி காலை 9.00மணி முதல் 2.00 மணி வரையிலும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்