என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் சுதந்திர தினவிழா - கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தேசிய கொடியை ஏற்றினார்
- பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றினார்.
- தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று (15.8.2022) நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, 84 பயனாளிகளுக்கு ரூ.26,41,830 மதிப்பிலான நலதிட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 115 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட காவல் கண்கானிப்பாளர்மணி , மாவட்ட வருவாய் அலுவலர்அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டனர்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில்பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவனின் யோகா நிகழ்ச்சி, புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 20 மாணவிகள், கவுதம புத்தர் சிறப்பு பள்ளியைச் சார்ந்த 10 மாணவர்கள், சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 50 மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழச்சிகள் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்