search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்
    X

    நகராட்சி பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

    • நகராட்சி பகுதிகளில் தினமும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தப்பட்டது.
    • பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. பெரம்பலூர் நகர தலைவர் ஜெயக்குமார் தலைமை வைத்தார். மாவட்ட பொது செயலாளர் முத்தமிழ்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில், கட்சி உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது, அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றுவது, அரசு மருத்துவக் கல்லூரியை உடனே துவங்க தமிழக அரசை வலியுறுத்துவது, சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்தை செயல்படுத்த வேண்டுவது, நகராட்சியில் தினமும் குப்பைகளை அகற்ற கேட்டுக் கொள்வது, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த நகராட்சியை வலியுறுத்துவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திர பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். பொறுப்பாளர் பிரியன் வரவேற்றார். பொறுப்பாளர் ஆசை தம்பி நன்றி கூறினார்.

    Next Story
    ×