என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டாசு கடைகளில் விதி மீறினால் நடவடிக்கை - கலெக்டர் கற்பகம்
- பட்டாசு கடைகளில் விதி மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்
- தற்காலிக பட்டாசு கடைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 5 குழுவினருக்கான பயிற்சி கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகள், நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 5 குழுவினருக்கான பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனைக் கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகில் புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது.
உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம் என்று அவர் பேசினார்.
Next Story






