search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் கடையில் தீவிபத்து
    X

    ரேசன் கடையில் தீவிபத்து

    • குன்னம் அண்ணாநகர் ரேசன் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் அரிசு மூட்டைகள் எரிந்து நாசமானது
    • பட்டாசு வெடித்ததால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகம்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அண்ணா நகர் பகுதியில் ஒரு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதா ரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த கடையின் பின்புறம் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்க மானது. இந்த நிலையில் சிலர் பட்டாசு வெடித்து விளையாடினர்.மேலும் அதிக சத்தம் எழுப்ப வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஜன்னலில் பட்டாசை வைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் தீப்பொறி கடைக்குள் விழுந்து தீப்பிடித்தது.

    கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை அறிந்த கடையின் விற்ப னையாளர் தொல்காப்பியன் அங்கு விரைந்து வந்து, கடையை திறந்து பார்த்தபோது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேசன் அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து கொண்டி ருந்தது கண்டு அதிர்ச்சிய டைந்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்ப டுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 23 மூட்டை ரேஷன் அரிசி எரிந்து நாசமானது. மேலும் 500க்கும் மேற்பட்ட காலி சாக்குகள் எரிந்து சாம்பல் ஆனது.இதுகுறித்து தொல்காப்பியன் குன்னம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×