search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர்கள் தண்ணீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
    X

    பயிர்கள் தண்ணீர் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை

    • மழையினால் பெரும் நஷ்டம் என்று விவசாயிகள் வேதனை
    • நுாற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் சாய்ந்து நீரில் மூழ்கின

    அகரம்சீகூர்

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட அகரம்சீகூர் பகுதிகளில் கோடை காலத்தில் வழக்கமான அளவைவிட இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனத்தின் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது இதன் காரணமாக அகரம்சீகூர் பகுதிகளில் விவசாய பொதுமக்கள் பொதுவாக நெல் சாகுபடியையே அதிகம் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 120 ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கின. மேலும் நெற்பயிர்கள் நன்கு முதிர்ச்சி அடை ந்துள்ளதால் தேங்கி நிற்கும் மழை நீரில் சாய்ந்து முளைக்க தொடங்கியுள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.மேலும் இப்பகுதியில் அறுவடை செய்தவர்களும் வைகோலை தங்களின் வயல்வெளியில் குவியலாக வைத்திருந்தனர். அதுவும் தற்போது வீணாகிவிட்டது. தொடர் மழையின் காரணமாக அகரம்சீகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைந்துள்ள தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் நெல் மூட்டைகளை வயல் பகுதியிலேயே வைத்து மூடி பாதுகாத்து வருகிறோம்.இந்நிலையில் நேற்று வானம் மேகமூட்டத்துடனே காணப்படுவதால் அறுவடை பணியை மேற்கொள்ளாமல் உள்ளோம். இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அனைத்தும் வீணாகும் நிலை ஏற்படும்.நாங்கள் கடன் வாங்கி பயிரிட ப்பட்டுள்ளோம் தற்போது பெய்த கனமழை எங்களுக்கு பெரும் அளவில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து எங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி விவசாய பொதுமக்கள் கூறினார்கள்.

    Next Story
    ×