என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடி தாக்கி விவசாயி பலி
- இடி தாக்கி விவசாயி பலியானார்
- மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வசிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி நாதன் (வயது45). விவசாயியான இவருக்கு கோடீஸ்வரி என்ற மனைவியும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர்.
துளசிநாதன் அவரது நண்பர் சிலம்பரசன் ஆகியோர், அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இடி துளசிநாதன் மற்றும் மாடு மீது பாய்ந்தது. இதில் துடிதுடித்து துளசிநாதன் மற்றும் மாடு சம்பவ இடதிலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






