search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து விவசாயி தற்கொலை
    X

    விஷம் குடித்து விவசாயி தற்கொலை

    • விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்
    • இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பில்லங்குளத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58), விவசாயி. இவர் தீராத வயிற்று வலியால் அவதியடைந்து வந்துள்ளார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் கடந்த 15-ந் தேதி வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×