என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயி விஷம் குடித்து தற்கொலை
- விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன் (வயது 60). விவசாயி. இவருக்கு குடல் இறக்க நோய் ஏற்பட்டு வயது முதிர்வு காரணமாக குணப்படுத்த முடியவில்லையாம். நோயை குணப்படுத்த பல மருத்துவமனைகளில் காண்பித்தும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் மணமுடைந்த அசோகன் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த உறவினர்கள் அசோகனை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அசோகன் மகன் கோதண்டராமன் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த அசோகன் 2 திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது."






