என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம்
- மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது
- குறைகளை நேரில் தெரிவித்து பயன்பெறலாம்
பெரம்பலூா்:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில், செயற்பொறியாளா்கள் முன்னிலையில், பெரம்பலூரிலுள்ள அலுவலகத்தில் மின் நுகா்வோருக்கான குறைகேட்பு நாள் கூட்டம் நாளை (12-ந் தேதி) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். எனவே பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகா்வோா் தங்களுடைய குறைகளை நேரில் தெரிவித்து, பயன்பெறலாம் என செயற்பொறியாளா் து. முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளாா்.
Next Story






