என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டுமானப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.5 சதவிகிதமாக குறைக்க கோரிக்கை
    X

    கட்டுமானப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.5 சதவிகிதமாக குறைக்க கோரிக்கை

    • கட்டுமானப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.5 சதவிகிதமாக குறைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள தனியார் திருமண அரங்கில் கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் தலைமையில் நடைபெற்றது.

    பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மொத்தம் 22 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பணபலன்களும் வழங்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பொருட்களுக்கும், ரியல் எஸ்டேட் துறைக்கும் 25 சதவிகிதமாக உள்ள ஜி.எஸ்.டி வரியை 5 சதவிகிதமாக மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதானி போன்ற ஒரு சில தனிநபர்களுக்கு மட்டுமே மத்திய அரசு பொருளாதார ரீதியாக செயல்பட்டு வருகிறது. எனவே மத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமைகளை மதித்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி இருந்தால் மட்டுமே அந்தந்த மக்களுடைய தேவைகள் சரியாக போய் சேரும், அந்த பணிகளை மோடி அரசு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர்கள் யுவராஜ், கண்ணன், மாநில பொருளாளர் பொறியாளர் ஜெகதீசன், மாநில இனைச்செயலாளர் பொறியாளர் சிவக்குமார், மண்டல தலைவர் பொறியாளர் ராஜாராம் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×