என் மலர்
உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளி தற்கொலை
- கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- தீராத வயிற்று வலியால் அவதியடைந்த
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31), கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட திருநாவுக்கரசு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் விஷ விதைகளை தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






