என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்
- நடந்து சென்ற போது நடந்த சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் தொளுதூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளியாக பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நாகராஜ் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதியது. இதில் நாகராஜ் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக நாகராஜ் உயிரிழந்தார்.இச்சம்பவம் தொடர்பாக வந்த புகாரின் பேரில் விரைந்து சென்ற மங்களமேடு போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த விபத்துக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






