என் மலர்
உள்ளூர் செய்திகள்

வலிப்பு நோயால் கீழே விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
- வலிப்பு நோயால் கீழே விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெரிய வடகரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையன் (வயது 46), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 2-ந்தேதி பெரம்பலூர் சுந்தர் நகர் பகுதியில் ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மதியம் வலிப்பு ஏற்பட்டு முத்தையன் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முத்தையன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முத்தையனுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.