என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் - கடைக்கு சீல் வைப்பு
- இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது.
- பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். கவிக்குமார் உத்தரவி ன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சின்னமுத்து சம்பவ இடத்திற்கு சென்று துரைராஜியின் பெட்டிக்கடையின் உணவு பாதுகாப்பு பதிவு எண்ணை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து எக்காரணம் கொண்டு கடையை திறக்ககூடாது என உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டி சென்றார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே எளம்பலூர் கிராமம், வடக்குமாதவி சாலை சமத்துவபுரத்தில் பகுதியில் துரைராஜ் என்பவர் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் பெரம்பலூர் மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்தபோது குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்ததையடுத்து அப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர். கவிக்குமார் உத்தரவி ன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சின்னமுத்து சம்பவ இடத்திற்கு சென்று துரைராஜியின் பெட்டிக்கடையின் உணவு பாதுகாப்பு பதிவு எண்ணை ரத்து செய்து கடைக்கு சீல் வைத்து எக்காரணம் கொண்டு கடையை திறக்ககூடாது என உத்தரவிட்டு நோட்டீஸ் ஒட்டி சென்றார்.
பின்னர் மாவட்ட நியமன அலுவலர் கவிக்குமா கூறுகையில், துரைராஜ் என்பவரது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்காக மற்றும் பான்மசாலா பொருட்கள் விற்பனைக்கு இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் எண்ணை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இக்கடையில் வணிகம் செய்வது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி சட்ட விரோதமானதாகும். இந்த அறிவிப்பாணையே அல்லது பூட்டின் மீதுள்ள அரக்கு சீலையோ அகற்றுவது உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்