என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்
- ரத்ததான முகாம் நடைபெற்றது
- 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் கவுள்பாளையம் நகர் புற வாழ்விடவாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். செயலாளர் தமிழ்செல்வன், பொருளாளர் ராஜேஷ், கவுல்பாளையம் ஒற்றுமையே பலம் நலசங்க தலைவர் உத்திரகுமார், செயலாளர் நாகராஜன், பொருளாளர் பாலகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுள்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் முகாமினை தொடங்கிவைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை டாக்டர் சத்யா தலைமையிலான செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். இதில் 40 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழை மாணவனுக்கு கல்வி உதவி தொகை, சங்கத்திற்கு ஸ்பீக்கர் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் ரத்தம் கொடையாளர்கள மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 200 பேருக்கும், சாலையோர பாதசாரிகள் 50 பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் இந்தியன் ரெட்கிராஸ் மாவட்ட கிளை கவுரவ செயலாளர் ஜெயராமன், லயன் தைரியம், லயன்ஸ்கிளப் செயலாளர் தமிழ்மாறன், இணை பொருளாளர் செல்வராஜ், செந்தில், உதிரம் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






