என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீண்டாமையை ஒழிப்பதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சிறப்பாக செயல்படுகிறது -வானதி சீனிவாசன் பேட்டி
    X

    தீண்டாமையை ஒழிப்பதில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சிறப்பாக செயல்படுகிறது -வானதி சீனிவாசன் பேட்டி

    • தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
    • தி.மு.க.வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்திருந்த கட்சியின் தேசிய மகளிர் அணியின் தலைவியும், எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    தி.மு.க. தலைவர் மற்றும் அக்கட்சியின் பல்வேறு மூத்த நிர்வாகிகள் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தாலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும் கூட தி.மு.க. அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் தி.மு.க. அரசு ஒரு தரப்பு மக்களுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். திருமாவளவனின் இலக்கு எப்போதும், இந்து கோவில்கள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டும் தான்.

    அவர் இதர மத நம்பிக்கைகளை, செயல்பாடுகளை கண்டுகொள்ளமாட்டார். தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தீண்டாமை ஒழிப்பில் அவர் ஆர்ப்பாட்டமில்லாமல், அரசியல் செய்யாமல் களப்பணியாற்றி வரும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற அமைப்புகளை ஆதரிக்க வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதல்வர் மிகவும் தீவிரமாக பேசி வருகிறார். ஆனால், மறுபுறம் அரசே டாஸ்மாக் கடைகள் மூலம் மது விற்பனை செய்கிறது. இது தி.மு.க.வின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது. தி.மு.க. என்றாலே இரட்டை வேடம் தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×