search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருள்சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா
    X

    அருள்சக்தி மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா

    • பாலையூரில் அருள்சக்தி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடைபெற்றது
    • கொட்டும் மழையில் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்

    வேப்பந்தட்டை,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் அருள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்திருவிழா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பூச்சொரிதல் விழா உடன் தொடங்கி 13 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தினமும் கரகாட்டம் மற்றும் வாண வேடிக்கையுடன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், மாரியம்மன் திருவீதி உலா ஊரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. நேற்று முன்தினம் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், அங்க பிரதட்சணம் செய்தல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்திய பக்தர்கள், பொங்கல், மாவிளக்கு பூஜையிலும் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மேளதாள, வாணவேடிக்கை முழங்க, மாரியம்மன் எழுந்தருளிய திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுந்தனர். கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. தேரோட்டத்தின் போது, திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×