search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செட்டிகுளம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    செட்டிகுளம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • செட்டிகுளம் அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், செட்டிக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி, பெரம்பலூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பினர் சார்பில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமை வகித்தார்.ஜூனியர் ரெட் கிராஸ் பெரம்பலூர் மாவட்ட அமைப்பாளர் ஜோதிவேல், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் தெய்வானை, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பாடாலூர் காவல் நிலைய தலைமை காவலர் உதயகுமார் கலந்து கொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்னைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார்.

    மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் பெரம்பலூர் மாவட்ட கௌரவ செயலாளர் ஜெயராமன் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவியர்கள் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கியும், பதாகை ஏந்தியவாறு பள்ளியில் தொடங்கி சார்பதிவாளர் அலுவலகம்,தபால் நிலைய அலுவலகம், வங்கிகள் வழியாக தொடங்கிய இடத்தில் பேரணி நிறைவு பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு,பேரிடர் மேலாண்மை மாநில கருத்தாளர் பாஸ்கர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விஜய்அரவிந்த் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பள்ளி தொழிற் கல்வி ஆசிரியரும்,ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளருமான ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரஞ்சித்குமார் வரவேற்றார். நிறைவாக, சாரணர் சாரணியர் இயக்கத்தின் வேப்பூர் கல்வி மாவட்ட செயலாளர் தனபால் நன்றி கூறினார்.

    Next Story
    ×