search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் ஸ்ரீ சீரடி மதுரம் சாய்பாபா ேகாவிலில் வருஷாபிஷேக விழா
    X

    பெரம்பலூர் ஸ்ரீ சீரடி மதுரம் சாய்பாபா ேகாவிலில் வருஷாபிஷேக விழா

    • பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழா பெற்றது.
    • மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    பெரம்பலூர்:

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதன் 8ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது.

    பெரம்பலூர் ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி காலை 9.15மணியளவில் மகாகணபதிஹோமத்துடன் பூஜை பூர்வாங்க பணிகள் துவங்கியது.

    இதை தொடர்ந்து 11மணியளவில் மகாதீபாரணை நடந்தது. தொடர்ந்து அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தியும் நடந்தது. மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகியது.

    ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.ஊர்வலம் கடைவீதி, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைந்தது.

    பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பன்னீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் செய்யப்பட்டு தொடர்ந்து இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடந்தது. நாள்முழுவதும் அன்னதானம் நடைபெறும். விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா ரெங்கராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனுப்பிரியா செந்திலக், அனுசுயா சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×