என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு

    பெரம்பலூர்:

    சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தி.மு.க. அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் மற்றும் அமைப்பு செயலாளர் வரகூர் அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.

    கிழக்கு ஒன்றிய செயலாளர் கர்ணன் அனைவரையும் வரவேற்றார், மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட பாசறை செயலாளர் இளஞ்செழியன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, முன்னாள் சேர்மன் வெண்ணிலா, துணை சேர்மன் சுசீலா, மாணவரணி துணை செயலாளர் ராஜா, இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாணவரணி கலையரசன், மேற்கு அவைத்தலைவர் வேணுநாதன், கிழக்கு அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஆலத்தூர் துணை சேர்மன் கமலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட பொருளாளர் மதுபாலகிருஷ்ணன், மருதடி சரவணன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன . முடிவில் ஸ்டாலின் நன்றி கூறினார்.

    Next Story
    ×