என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் வியாபாரி பலி
    X

    சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் வியாபாரி பலி

    • பெரம்பலூர் அருகே சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பெண் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்
    • லிப்ட் கேட்டு ஏறியவருக்கு நேர்ந்த சோகம்

    குன்னம்,

    பெரம்பலூர் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார் கோவில், ராஜகோபால் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மலர்கொடி (வயது 47), பலூன் வியாபாரி.

    இவா் பல்வேறு ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு சென்ற பலூன் வியாபாரம் செய்து வந்தார்.

    இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் வியாபாரத்தை முடித்து கொண்டு ஊருக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துறையூர் நோக்கி சென்ற சரக்கு வாகனம் வந்தது. மலர்கொடி அந்த வாகனத்தில் ஏறி பயணம் செய்தாா்.

    ஆலத்தூர் கேட்-துறையூர் சாலையில் குரூர் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் செய்த மலர்கொடி உள்பட 6 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.. இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×