search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயி வீட்டில் 7 பவுன், ரூ.12 லட்சம் கொள்ளை
    X

    விவசாயி வீட்டில் 7 பவுன், ரூ.12 லட்சம் கொள்ளை

    • பெரம்பலூர் விவசாயி வீட்டு பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
    • கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயின் உதவியுடன் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ்(வயது 55). விவசாயியான இவர் கடந்த 27-ந் தேதி பெரம்பலூர் அருகே உள்ள புது நடுவயலூர் கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவிற்கு அந்த ஊரை சேர்ந்த தனது உறவினர் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் ரங்கராஜ் வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நேற்று காலை பார்க்கும்போது ரங்கராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.இதுகுறித்து உடனே அவர் ரங்கராஜை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் நேற்று காலை 6 மணி அளவில் ரங்கராஜ் வீட்டிற்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ஆகியவை கொள்ளைபோய் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து அவர் உடனே பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.மோப்பநாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடிச் சென்று நின்று விட்டது. யாரையும் அது கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×