என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது
    X

    திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது

    • திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜின் மனைவி ஜெயலெட்சுமியின் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணத்தை நேற்று திருடிச்சென்ற களரம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் மாரிமுத்துவை(வயது 24) பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் செட்டிக்குளம் வடக்கு தெருவில் பெரியசாமியின் மகன் செல்வராஜின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரது அரிசி ஆலையில் இரும்பு கம்பிகளை திருடிய அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் பாஸ்கர்(31), ரவி(48), அமிர்தலிங்கம் என்ற அமுல்ராஜ்(37), சுந்தர்ராஜின் மகன் தமிழரசன்(23) ஆகிய 4 பேரை பாடாலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×