search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல்
    X

    குன்னத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல்

    • குன்னத்தில் ரூ.40 லட்சத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
    • திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர், ஜூலை.15-

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.40 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதனை உள்ள தொடர்ந்து பெருமத்தூர் குடிகாடு சமத்துவபுரம் தார்ச்சாலை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் திருமாந்துறை ஊராட்சி நோவா நகர் பகுதியில் பகுதி நேர நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார். இதையடுத்து பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான லெப்பைக்குடிகாடு-ஆத்தூர் புதிய வழித்தட பேருந்து சேவையினை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் துவக்கி வைத்தார். அதேபோல் அத்தியூர்- குடிகாடுதார் சாலை திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    இதேபோல், அகரம் சீகூரில் பகுதி நேர நியாய விலைக்கடை அகரம்சீகூர் ஊராட்சி கருப்பட்டாங்குறிச்சி பகுதியில் பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல், கீழப்பெரம்பலூர் ஊராட்சி வேள்விமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடம் ஆகியவற்றையும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காலை திறந்துவைத்தார்.

    நிகழ்ச்சிகளில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராஜேந்திரன், குன்னம் தாசில்தார் அனிதா, வேப்பூர் யூனியன் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×