என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
35 ஏரிகளில் தண்ணீர் நிரம்பியது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சிறிது நாட்களிலேயே லாடபுரம் பெரிய ஏரியும், லாடபுரம் கீழேரியும் நிரம்பின. பெரம்பலூர் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பின. அதனைத்தொடர்ந்து சற்று இடைவெளிவிட்டு கடந்த 13-ந்தேதி கன மழை பெய்தது. பெரம்பலூரில் 2 மணிநேரம் மழை கொட்டியது. அதனைத்தொடர்ந்து இரவு வரையிலும் மழை விட்டுவிட்டு பெய்தது.
தொடர்மழையின் காரணமாக லாடபுரம் ஏரிகள், குரும்பலூர் ஏரி, செஞ்சேரி ஏரி, அரணாரை நீலியம்மன்-செல்லியம்மன் ஏரி, பெரம்பலூர் பெரியஏரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை மீண்டும் நிரம்பின.
பெரம்பலூரில் உள்ள திரவுபதி குளம் என்றழைக்கப்படும் தெப்பக்குளம் நேற்று முன்தினம் முழுமையாக நிரம்பியது. மழை நீரும், காட்டாற்று ஓடைகளின் ஊற்றுநீரும் ஏரி, மதகுகளின் வழியே வழிந்தோடுவது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. பெரம்பலூர் பெரிய ஏரியில் நேற்று அதிகாலை பிரதான மதகில் நீர் வழிந்தோடியது. இதையடுத்து, பெரிய ஏரி ஆயக்கட்டு பகுதி விவசாயிகள், மதனகோபாலசுவாமி கோவில் பணியாளர்கள் பெரிய ஏரியில் நீர்நிலைக்கு தேங்காய் உடைத்தும் நிவேதனம் செய்தும் வழிபட்டனர். பின்னர் பூக்களை தூவி புதுவெள்ளநீரை வரவேற்றனர்.
பெரிய ஏரியில் கடை வழிந்தோடிய மழைநீரில் மீன்கள் அதிகம் தென்பட்டதால், மீன்பிடிப்பவர்கள் வலைகளை விரித்து மீன்களை பிடித்து சென்றனர். பள்ளி மாணவ-மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து பெரிய ஏரியில் நீர்வழிந்தோடியதை கண்டு ரசித்தனர்.
இதேபோல் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரியின் உபரிநீர் வாய்க்காலிலும், துறைமங்கலம் பெரிய ஏரி வழிந்தோடும் மதகு பகுதியிலும் இளைஞர்கள் ஆர்வமுடன் மீன்பிடிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் டவுனில் பெய்த பலத்த மழை காரணமாகவும், பெரம்பலூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடி வருவதாலும், பெரம்பலூரில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி மற்றும் துறைமங்கலம் பெரிய ஏரி ஆகியவை நிரம்பின.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் பராமரிக்கப்படும் ஏரிகள் மொத்தம் 73 உள்ளன. இவற்றில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. பென்னகோணம், வெங்கலம், பேரையூர் ஆகிய ஏரிகள் 80 சதவீதம் நீர் நிரம்பி உள்ளன. செங்குணம், அன்னமங்கலம், நாரணமங்கலம், காரை பெரியஏரி, சின்னாறு போன்ற ஏரிகள் 50 சதவீதத்திற்கு கீழ் தண்ணீர் நிரம்பி உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்