search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    237 பேர்  ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர்
    X

    237 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர்

    • ஆசிரியர் தகுதி தேர்வினை 237 பேர் எழுதினர்.
    • 2 மையங்களில் நடந்தது.

    பெரம்பலூர்

    தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் கணினி வழி தேர்வு நேற்று தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடந்தது. காலை, மதியம் ஆகிய 2 வேளைகளில் தேர்வு நடந்தது. ஆசிரியர் தகுதி தேர்வில் முதல் நாள் கணினி வழி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 370 பேரில், 237 பேர் தேர்வு எழுதினர். 133 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வு வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.

    Next Story
    ×