என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன், 7 லட்சம் கொள்ளை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை. இவர் சென்னையில் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் உடல் நலக்குறைவால் இறந்து விட் டார்.இவரது மனைவி தமி–ழரசி (வயது 56). கணவர் இறந்து விட்ட நிலையில் தமிழரசி தனது மகன் விஜயகுமாருடன் நெடுவா–சல் கிராமத்தில் வசித்து வந்தார். காலனி தெருவில் தமிழரசிக்கு இரண்டு வீடு–கள் உள்ளன. அதில் தமிழரசி பகலில் பழைய வீட்டில் தங்கி அங்கு சமைத்து சாப்பிட்டு வந்தார். பின்னர் இரவில் அதே பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய வீட் டில் தங்கிக் கொள்வார்.மகன் விஜயகுமாருக்கு திருமணமாகி அவர் குடும்பத் துடன் தனிக்குடித்தனம் வசித்து வந்தார். நேற்றும் தமிழரசி வழக்கம்போல் பகலில் பழைய வீட்டில் தங்கி விட்டு, இரவில் வீட்டின் பூட்டை பூட்டிவிட்டு புதிய வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றார்.இந்நிலையில் நள்ளிர–வில் மர்ம நபர்கள் தமிழ–ரசியின் பழைய வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் இருந்த பீரோ–வையும் உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள் ளையடித்து சென்ற–னர்.இன்று அதிகாலை தூங்கி எழுந்த தமிழரசி சுமார் 5 மணி அளவில் வழக்கம்போல் பழைய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பதட்டத்துடன் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவும் திறந்து கிடந்ததோடு, அதில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந் தது.இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீ–சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணவர்கள், மோப்பநாய் கொண்டு தடய அறிவியல் பரிசோதனை செய்யப்பட்டது.தமிழரசி இரவில் புதிய வீட்டுக்கு சென்று தங்கி வந்ததை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த நபர் கள்தான் இந்த துணி–கர கொள்ளையை அரங் கேற்றி உள்ளனர். தெரிந்த நபர்கள் யாராவது இதில் ஈடுபட்டி–ருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீ–சார் விசாரணைணை முடுக்கி விட்டுள்ளனர்.






