search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலகொலா ஊராட்சியில் ஒரே ஆண்டில் ரூ.6.30 கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்ட பணிகள்
    X

    பாலகொலா ஊராட்சியில் ஒரே ஆண்டில் ரூ.6.30 கோடி மதிப்பில் மக்கள் நலத்திட்ட பணிகள்

    • ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன் குழுவினர் மும்முரம்
    • அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பொதுமக்கள் வாழ்த்து

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்பேரில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.ஸ்ரீதரன், தே.நந்தகுமார் அறிவுரைப்படி, ஊராட்சி தலைவர் எம்.கலையரசி முத்து, துணை தலைவர் மஞ்சை மோகன், ஊராட்சி செயலர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலகொலா ஊராட்சியில் தற்போது மக்கள் நலத்திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அதிலும் குறிப்பாக 2022 மற்றும் 2023-ம் நிதியாண்டில் 15-வது நிதிகுழுமானிய திட்டம் மூலம் ரூ.98.87 லட்சம் மதிப்பிலும், ஜெ.ஜெ.எம்.திட்டம் மூலம் ரூ.404.29 லட்சம் மதிப்பிலும், ஊராட்சி நிதி திட்டம் மூலம் ரூ.49.94 லட்சம் மதிப்பிலும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.78.50 லட்சம் மதிப்பிலும் பல்வேறு மக்கள்நலத்திட்டபணிகள் நடைபெற்று வருகின்றன.

    பாலகொலா ஊராட்சியில் ஒரே ஆண்டில் சுமார் 6.30 கோடி லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணிகள் செய்து சாதனை படைத்து உள்ளனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×