search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் தொடர் மின்தடையால் மக்கள் அவதி
    X

    குன்னூரில் தொடர் மின்தடையால் மக்கள் அவதி

    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு
    • மழை தூறல் ஏற்பட்டாலே மின்தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2 மாதங்களாக ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

    மேலும் வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மருத்துவமனைகள், பல ஆயிரம் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றிற்கு 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை கூட தினமும் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மின்தடை ஏற்படுகிறது.

    பொதுவாகவே லேசான மழை தூறல் ஏற்பட்டாலே நீலகிரியில் மின்தடை ஆவது சர்வ சாதாரணமான விஷயம் என மக்கள் பழகி விட்டனர். ஆனால் கடந்த இரண்டொரு மாதங்களாக வழக்கத்திற்கு மாறாக மின்தடை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

    இதனால் மக்களும், வர்த்தக நிறுவனங்கள் பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

    Next Story
    ×