என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    நெல்லையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    • ஆத்திரமடைந்த மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கவுன்சிலர் வசந்தா உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்டது திருவண்ணாதபுரம் பொட்டல் கிராமம். இங்கு சமீப காலமாக வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது.

    மறியலில்

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக டவுனுக்கு புறப்பட்டுச் சென்ற பஸ் செல்வதற்கு வழியில்லாமல் நின்று விட்டது. அந்த பஸ்ஸினை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நடவடிக்கை

    தகவல் அறிந்து அங்கு வந்த 4-வது வார்டு கவுன்சிலர் வசந்தா உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொட்டல் கிராமத்தில் நாங்கள் வசிக்கும் தெருவில் மட்டும் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இந்த தெருவுக்கு மட்டும் குடிதண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. வாரத்துக்கு ஒரு முறை தான் கிடைக்கிறது. மற்ற பகுதிகளில் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. ஏன் வரவில்லை என்று கேட்கும் போது மோட்டார் பழுதாகிவிட்டது என்று கூறுகிறார்கள்.

    நிரந்தர தீர்வு

    அடிக்கடி இந்த பதிலை தான் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே புதிய மோட்டார் வாங்கி தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும். அப்போதுதான் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று கூறினர்.

    Next Story
    ×