என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கரூரில் இருந்து குஜிலியம்பாறைக்கு பஸ்கள் இயக்கப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
- குஜிலியம்பாறையில் காலை நேரத்தில் கரூர் பகுதிக்கு ஒரே பஸ் மட்டுமே உள்ளது.
- இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர்.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. மிகவும் வறட்சி யான பகுதியான இங்கு பெரும்பாலும் கூலித்தொழி லாளிகள், மில்வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் உள்ளனர். தற்போது குஜிலியம்பாறை தனித்தாலு காவாக இயங்கி வருகிறது.
இப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு பஸ் மூலம் கரூர், திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர். காலை நேரத்தில் கரூர் பகுதிக்கு ஒரே பஸ் மட்டுமே உள்ளது. இதனால் அவர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. மேலும் அதிகளவு கூட்டம் கூடுவ தால் பஸ்சில் முண்டியடித்து செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
இதனால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படு கின்றனர். கரூரில் இருந்து பாளையத்திற்கு அதிகளவு பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களை குஜிலியம்பாறை வரை இயக்கினால் கிராம மக்கள்சென்று வர ஏதுவாக இருக்கும். எனவே போக்கு வரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்