என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீடு ஜப்தி நடவடிக்கையை கண்டித்து சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
- கோர்ட்டு உத்தரவின் பேரில் வீட்டை அதிகாரிகளிகள் ஜப்தி செய்தனர்.
- வீடு எங்களுக்கு சொந்தம் என சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரை:
திருச்சியை சேர்ந்தவர் பானு. இவருக்கு சொந்தமான வீடு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் சந்தைபேட்டையில் உள்ளது. இந்த வீட்டில் பூ வியாபாரி மாரியம்மாள், ரேவதி உள்பட 5 பேர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். மேலும் அந்த வீட்டை வாங்குவதற்காக குறிப்பிட்ட தொகையை பானுவிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை பானு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டை வாங்கிய நபர் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி அதிகாரிகள் மற்றும் போலீசார் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த மாரியம்மாள் உள்பட குடும்பத்தார் நாங்களும் பணம் கொடுத்துள்ளோம். எனவே வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எனக்கூறினர். மேலும் அவ்வழியாக ெசன்ற பஸ்சை மறித்து சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தியால் அவர்கள் கலைந்து சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்