search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் புத்தக திருவிழாவில் குவிந்த பொதுமக்கள்
    X

    நீலகிரியில் புத்தக திருவிழாவில் குவிந்த பொதுமக்கள்

    • ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
    • ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார்.

    ஊட்டி

    கடந்த 1819-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன் தற்போதுள்ள ஊட்டியை கட்டமைத்து, நவீனப்படுத்தி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினாா்.

    இவா் ஊட்டிக்கு வருகை தந்து வருகிற ஜூன் மாதத்துடன் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

    இதனைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசு சாா்பில் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கலைத் திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலைத் திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புத்தக திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

    புத்தகத் திருவிழாவை நீலகிரி எம்.பி., ஆ.ராசா தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். இதனைத் தொடா்ந்து, 'ஊட்டி 200 என்ற லோகோவை' வெளியிட்டார். தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையும் திறந்து வைத்தார். விழாவில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித்தவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்கள். இதுதவிர கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இந்த புத்தகத் திருவிழாவில் 60-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.

    இதில், ஜான் சல்லீவன் நவீன ஊட்டி உருவாக எடுத்த முயற்சி, நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பண்டைய பழங்குடியின மக்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள், மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.

    மேலும், வனத் துறையின் மூலம் வன விலங்குகள் பாதுகாப்பது குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் பதப்படுத்தப்பட்ட சிறுத்தை, நீலகிரி வரையாடு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன.

    நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக தொடங்கிய புத்தக திருவிழாவினை காண நேற்று ஏராளமானோர் குவிந்தனர்.

    பொதுமக்கள், மாணவ, மாணவிகள், புத்தக பிரியர்கள் என அனைவரும் புத்தக அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர்பொன்தோஸ், ஊட்டி ஊராட்சி தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணிஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×