என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் உரிய நேரத்துக்கு அரசு பஸ்கள் வராததால் பொதுமக்கள் தவிப்பு
    X

    பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்.

    நிலக்கோட்டையில் உரிய நேரத்துக்கு அரசு பஸ்கள் வராததால் பொதுமக்கள் தவிப்பு

    • மாணவ மாணவிகளுக்கு சரியான நேரத்திற்கு நிலக்கோட்டை, திண்டுக்கல் அரசு பஸ் கடந்த 2 மாதங்களாக சரிவராததால் மாணவ -மாணவி கள் மற்றும் திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டுக்கு வரும விவசாயிகள் பாதிக்கப்படு கின்றனர்.
    • கடந்த ஆண்டுகளில் வந்த அந்த அத்தனை பஸ்களும் சரியான நேரத்திற்கும் வருவதற்கும், கூடுதலாக பஸ் இயக்கவும், மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வுக்கு உட்பட்ட அணை ப்பட்டி, விளாம்பட்டி, சிலுக்குவார் பட்டி, பள்ள ப்பட்டி, தோப்புப்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்பட சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திண்டுக்கல்லில் படிப்ப தற்காக மாணவ மாணவிகள் கல்லூரிக்கும் பள்ளி களுக்கும் தினந்தோறும் சென்று வருகின்றனர்.

    அவ்வாறு வரும் மாணவ மாணவிகளுக்கு சரியான நேரத்திற்கு நிலக்கோட்டை, திண்டுக்கல் அரசு பஸ் கடந்த 2 மாதங்களாக சரிவர வருவதில்லை. இதன் காரணமாக மாணவ மாணவி கள் பாதிக்கப்படு கின்றனர். அதேபோன்று நிலக்கோட்டையில் இருந்த திண்டுக்கல் பூ மார்க்கெ ட்டுக்கு தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பஸ்ஸில் சென்று வருவது வழக்கம்.

    நிலக்கோட்டையை பொறுத்தவரை குறைந்த அளவே திண்டுக்கல் பஸ்கள் உள்ளன. இந்தக் குறைந்த அளவு பஸ்கள் கூட கடந்த 2 மாதங்களாக சரிவர வருவதில்லை. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவ மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    காலை நேரத்தில் அரசு பஸ் வராத காரணத்தால் தனியார் பஸ்களில் ஏறு வதற்கு ஒருவருக்கொருவர் மல்லு கட்டி சண்டை போடுவது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாக மாறி வருகிறது. எனவே கடந்த ஆண்டுகளில் வந்த அந்த அத்தனை பஸ்களும் சரியான நேரத்திற்கும் வருவதற்கும், கூடுதலாக பஸ் இயக்கவும், மாவட்ட கலெக்டர் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசு மகளிருக்கு இலவச பஸ் இயக்கப்படுவதால்தான் இப்படி பஸ்களை குறைந்த அளவில் அனுப்புகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். மேலும் போக்குவரத்துக் கழகத்தில் ஏராளமான காலியிடங்கள் இருப்பதால் பல இடங்க ளுக்கு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.

    இதுகுறித்து சிலுக்கு வார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராஜாராம் கூறிய தாவது:-

    திண்டு க்கல்லுக்கு தினந்தோ றும் பஸ் இயக்கு வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. இதனை உரிய முறையில் ஆய்வு செய்து ஏற்கனவே விடப்பட்ட பஸ்கள் சரியான நேரத்தில் வருவதற்கும், அதே சமயம் தற்சமயம் மக்கள் தொகை கூடியுள்ள நிலையில் அதற்கு தகுந்தாற்போல் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

    Next Story
    ×