search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் சோதனை-51 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு
    X

    பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் சோதனை-51 தொழில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு

    • பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகு திக ளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
    • முரண்பாடு கண்டறியப் பட்டதொழில் நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது.

    கோவை

    கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் வெளி யிட்ட செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:

    கோவை கூடுதல் தொழிலா ளர் ஆணையாளர் வழிகாட் டுதலின் படியும், இணை ஆணையாளர் அறிவுரையின் படியும் எடையளவு சட்ட விதிகளின் கீழ் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை பகு திக ளில் தொழிலாளர் உதவிஆய்வாளர்கள் தீவிர சோதனை நடத்தினர். இதில், பொட்டலபொருட்கள் விதிகளின் கீழ் உரிய பதிவு சான்று பெறாதது. உரிய அறிவிப்பு இல்லாதது, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

    இது தொடர்பாக மொத்தம் 51 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், முரண்பாடு கண்டறியப் பட்டதொழில் நிறுவனங்களின் மீது விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனங்க ளுக்கு குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

    மேலும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் எடைகு றைவு, மறு முத்திரையிடப்ப டாத எடையளவு வைத்திருத் தல் உள்ளிட்டவை தொடர்பாக 105 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடு கண் டறியப்பட்டது. மொத்தம் 156 நிறுவனங் களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில் முரண்பாடு கண்டறியப்பட்ட 51 தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டு அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×