search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற  4 கடைகளுக்கு அபராதம்
    X

    சங்கராபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 கடைகளுக்கு அபராதம்

    • 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் ஆகியோர் சங்கராபுரம் கடைவீதி, திருக்கோவிலூர் சாலை, கள்ளக்குறிச்சி சாலை, டி.எம்.பள்ளி சந்து ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் குட்கா பொருட்களை கைப்பற்றி 4 கடை உரிமையாளர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    Next Story
    ×