என் மலர்
உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி கிரிவல வழிபாடு நடைபெற்றபோது எடுத்தபடம்.
வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமி கோவிலில் பவுர்ணமி கிரிவல வழிபாடு
- வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் முத்துகிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது.
- இந்த கோவிலின் அருகிலுள்ள சாமியார் பொத்தையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவல வழி பாடு நடைபெற்று வருகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் சார்பில் வள்ளியூர் முத்துகிருஷ்ண சுவாமி கோவிலில் பவுர்ணமி கிரிவல வழிபாடு நடைபெற்றது.
வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் முத்துகிருஷ்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகி லுள்ள சாமியார் பொத்தையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் கிரிவல வழி பாடு நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பவுர்ணமி கிரிவல வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக சாமியார் பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கிரிவல வழிபாடு தொடங்கியது. பூஜித குரு மாதாஜிவித்தம்மா பூஜையை தொடங்கி வைத்தார்.
திரளான பக்தர்கள் சாமியார் பொத்தை யைச்சு ற்றி ஓம் நமோ பகவதே முத்துகிருஷ்ணாய என்ற மந்திரங்களை உச்சரித்து வலம் வந்தனர். பின்னர் மாலையில் முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ள மகாமேரு மண்ட பத்தில் திருவிளக்கு பூஜை நடை பெ ற்றது. இதில் திர ளான பெண்கள் பங்கேற்று பூஜை செய்தனர்.
ஏற்பாடுகளை முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.






