search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி,வாசுதேவநல்லூரில் அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மரியாதை
    X

    சிவகிரியில் அம்பேத்கர் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்திய காட்சி.

    சிவகிரி,வாசுதேவநல்லூரில் அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மரியாதை

    • சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவர் ராம்குமார் தலைமையில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • சிவகிரியில் அம்பேத்கர் படத்திற்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

    சிவகிரி:

    அம்பேத்கரின் 132 -வது பிறந்த நாளை முன்னிட்டு வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றியம் பா.ஜ.க. சார்பில் சுப்பிரமணியபுரம் ஊராட்சி தலைவரும், வக்கீலும், மண்டல் தலைவருமான ராம்குமார் தலைமையில் வாசுதேவ நல்லூரில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ராமராஜா, பொது செயலாளர்கள் மகாலிங்கம், தினேஷ், பொருளாளர் கங்காதரன், ராமச்சந்திரன், முருகன், சாமி, பால்ராஜ், ரவி, முத்தமிழ்செல்வம், சங்கர், பண்டாரம், செல்வ கணேசன், இசக்கி, சர வணன், தங்க ராஜ், கவியரசு, வாஜ்பாய் முரு கன், மாரி யப்பன், செல்வம், குரு சாமி, கணே சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ்

    இதேபோல் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி மற்றும் சிவகிரி நகர காங் கிரஸ் சார்பில் சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரியில் அவரது சிலைக்கு முன்பாக அலங்க ரித்து வைக்க ப்பட்டி ருந்த படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. அணி தலைவர் திருஞானம், மாவட்ட காங்கிரஸ் துணை த்தலைவர் கணேசன், நகர தலைவர் வக்கீல் சண்முக சுந்தரம், தொகுதி ஓ.பி.சி. தலைவர் காந்தி, நகர ஓ.பி.சி. தலைவர் மாரியப்பன், காங்கிரஸ் இலக்கிய பிரிவு தலைவர் அசோக், நிர்வாகிகள் நாட்டாண்மை மாணி க்கம், சந்திரன், பிச்சை மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்ட னர். முடிவில் நகர செயலாளர் வெள்ளைச் சாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×