search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூங்கா மேம்பாட்டு பணிகள்- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
    X

    பூங்கா மேம்பாட்டு பணிக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.

    பூங்கா மேம்பாட்டு பணிகள்- எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

    • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
    • நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் பணிகள் செய்யப்படஉள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.

    அதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் ஆகியன செய்யப்படவுள்ளது.

    அடுத்து பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக நடைபெற்ற பூமி பூஜையில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

    நகராட்சித் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி உறுப்பினர்கள் ராஜலெட்சுமி ராஜேந்திரன், சர்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன் மற்றும் நகராட்சி பணி ஆய்வர்கள் ரம்யா, ராஜாராமன், ஒப்பந்தகாரர் ரிஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×