என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு
- ஆவணி மாத வளர்பிறை சதுர்தசியினை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் ஆவணி மாத வளர்பிறை சதுர்தசியினை முன்னிட்டு நடராஜர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கைலாய வாத்தியம் முழக்கத்துடன் தேவாரம் ,திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட18 வகையான வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. மதியம் 1 மணி அளவில் மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப் பட்டது.
விழா ஏற்பாட்டினை திருஞானசம்பந்தர் மடாலய நிர்வாகி சிவ. ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரமத்தி வேலூர் சிவனடியார்கள் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.