search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவி இறப்பு குறித்து துண்டு பிரசுரம் அச்சடிக்க கூடாது
    X

    அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    மாணவி இறப்பு குறித்து துண்டு பிரசுரம் அச்சடிக்க கூடாது

    • மாணவி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டு பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழிஉட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, பொறை யார், வைத்தீஸ்வ ரன்கோவில் ஆகிய பகுதிகளில்இயங்கி வரும் அச்சக உரிமையாள ர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பேசும்போது:-

    பிரிண்டிங் பிரஸ் வைக்க சட்ட உரிமம் பெற வேண்டும்.கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அசாதாரண சூழ்நிலை இருந்து வரும் நிலையில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக போஸ்டர், துண்டுப் பிரசுரம் அச்சடிக்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும் போஸ்டர்கள் அச்சடிக்க வருபவர்களின் பெயர், முகவரி, ஆதார் அட்டை கைபேசி எண், ஆகியவற்றை முறையாக பதிவு செய்து பராமரிக்க வேண்டும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இயக்கங்கள் சார்பில் போஸ்டர்கள் அச்சடிக்க வந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் உடனிருந்தார்.

    Next Story
    ×